search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செக் மோசடி வழக்கு"

    செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியனுக்கு கரூர் கோர்ட்டு பிடிவாரண்டு அனுப்பியுள்ளது. #ActorNapoleon
    கரூர்:

    கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நடிகர் கவுதம் கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் நடித்த முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த படம் வெளியானபோது, ரூ.53 லட்சத்து 54 ஆயிரத்தை கோபால கிருஷ்ணனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. அப்போது நெப்போலியன் அந்த பணத்திற்கு பொறுப்பேற்று தருவதாக கூறியுள்ளார்.

    பின்னர் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ.28 லட்சத்து 54 ஆயிரத்திற்கான காசோலையை, கோபாலகிருஷ்ணனுக்கு கொடுத்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கியில் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் ஏமாற்றமடைந்த கோபாலகிருஷ்ணன், இதுதொடர்பாக நெப்போலியன் மீது, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக 5 முறைக்கு மேல் நெப்போலியனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகோத்தமன், வழக்கில் ஆஜராகாத நெப்போலியனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 31-ந்தேதிக்கும் ஒத்திவைத்தார்.

    இதனிடையே வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெப்போலியன் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #ActorNapoleon
    செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. #LokSabha #FraudCase #BillPassed
    புதுடெல்லி:

    செக் (காசோலை) மோசடி வழக்குகள் நீண்ட காலம் இழுத்தடிக்காமல் விரைவில் முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக செலாவணி மசோதா 1881-ல் திருத்தம் செய்து புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

    இதன் மூலம் செக் மோசடி வழக்குகளில் இருக்கும் தேவையற்ற சட்ட நடைமுறைகள் களையப்படுகின்றன. அத்துடன் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இந்த மோசடியில் ஈடுபட்டவரிடம் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு 20 சதவீதத்துக்கு மிகாமல் நிவாரணம் பெற்று தரப்படும். அதேநேரம் குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியில் விடுவிக்கப்பட்டால், அவர் வழங்கிய நிவாரணம் வட்டியுடன் திரும்ப கிடைக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்த நிதித்துறை இணை மந்திரி சிவ் பிரசாத் சுக்லா, காசோலைகள் மற்றும் வங்கி நடைமுறைகள் மீதான நம்பகத்தன்மையை இந்த மசோதா காக்கும் என்று கூறினார்.  #LokSabha #FraudCase #BillPassed  #tamilnews 
    ‘செக்’ மோசடி வழக்கில் டாக்டருக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் டாக்டர் ராஜேந்திரன்(வயது 65). இவர், அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். தான் வாங்கிய கடனுக்காக ரூ.12 லட்சத்துக்கு டாக்டர் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியனுக்கு செக் கொடுத்துள்ளார்.

    அந்த செக்கை பாலசுப்பிரமணியன் வங்கியில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் டாக்டர் ராஜேந்திரன் மீது பாலசுப்பிரமணியன் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2016-ம் ஆண்டு முதல் விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த படடுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.12 லட்சத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். பின்னர் டாக்டர் ராஜேந்திரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 
    ×